Kumudam
Preloader

பெற்ற மகனையே காதலன் மீது கொண்ட மோகத்தால் சொல்ல முடியாத கொடுமைகளுக்கு ஆளாக்கி, அத்தனையையும் மௌன சாட்சியாக வேடிக்கை பார்த்து, அந்த 18 மாதக் குழந்தையின் மரணத்துக்கே காரணமாகிப் போன அகிலாவைப் பற்றித்தான் கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் அனல் தெறிக்கும் விவாதங்கள் நடந்தன. வயிற்றில் அந்தக் குழந்தை இருக்கும்போதே கணவனைப் பறிகொடுத்துவிட்டு, காதலனுடன் வாழ வந்த இடத்தில்தான் அந்தக் காதலன் ஓர் அரக்கனாக வடிவெடுத்து, தனது குழந்தையை அணு அணுவாய் சித்ரவதை செய்வதைக் கண்டும் காணாமலும் இருந்திருக்கிறார் இந்தப் பெண். குழந்தையின் மரணத்தையும் பொய்க் காரணம் சொல்லி திசைதிருப்ப முன்வந்தாரே தவிர, அந்தக் கயவனை காட்டிக்கொடுக்க முன்வரவில்லை. தெய்வத்துக்கு நிகராக பெண்களைப் போற்றும் இந்திய சமூகத்தில் எப்படி இப்படி ஒரு பெண்ணுக்கு பேய்மனம் உண்டாகிறது! தன் ரத்தத்தில் உதித்த சிசுவை, காமமோ அல்லது காதலோ ஏதோ ஒரு கண்றாவிக்காக இத்தனை கொடுமைகளுக்கு ஆளாக்க இந்தப் பேய் பெண்ணுக்கு எப்படி மனம் வந்தது? சிநேகிதிகளே, இதில் எங்கே தவறு? யார் முதல் குற்றவாளி? இதுபோன்ற வக்கிரங்களுக்கும் வன்முறைகளுக்கும் எங்கே இருக்கிறது ஊற்றுக்கண்? இதுபோன்ற அதிரவைக்கும் அச்சுறுத்தல்களைத் தவிர்க்க என்னதான் வழி? இவளைப்போன்ற கோணல் புத்தி பெண்களுக்கு ஒரு முன்னெச்சரிக்கையாகவும் வழிகாட்டுதலாகவும் இருக்கட்டுமே...

0 / 150 words