Kumudam
Preloader

அன்புத்தோழிகளே, நாகர்கோவில் காசிக்கு, நீதிமன்றம் சாகும்வரை சிறைத் தண்டனையை உறுதி செய்யப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். மிகுந்த நயவஞ்சகத்துடன் பல பெண்களை ஏமாற்றி, அவர்களைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அந்தரங்கமான புகைப்படங்களை எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி, தான் நினைத்ததைச் சாதித்திருக்கிறான் அந்தக் கொடூரன். ஒரு காலத்தில் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டுமென்றால், ஸ்டுடியோவிற்குச் சென்று பணம் செலுத்தி, காத்திருந்து, புகைப்படம் எடுத்து அதை ஒரு பொக்கிஷம் போல் பாதுகாத்த காலம் இருந்தது. ஆனால் இன்று, அலைபேசி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் யாருடனும், எப்போது வேண்டுமானாலும் புகைப்படம் எடுக்கும் நிலை உருவாகியுள்ளது. பார்க்கும் அனைவருடனும், செல்லும் இடமெல்லாம் எந்த யோசனையும் இல்லாமல் அலைபேசியில் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் பழக்கம், எதிர்காலத்தில் AI தொழில்நுட்பத்தின் மூலம் நமக்கே ஆபத்தாக மாறக்கூடும் என்பதை எத்தனை பேர் உணர்ந்திருக்கிறார்கள்? அலைபேசி விஞ்ஞானத்தை நாம் தவறாக பயன்படுத்திகொண்டிருக்கிறோமா? நமக்கான வலையை நாமே விரித்துகொள்கிறோமோ? இதுகுறித்து உங்கள் கருத்துகளையும், பெண்களின் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு ஆலோசனைகளையும் பகிருங்கள் தோழிகளே... உங்கள் கருத்துகளை எளிதாக பதிவு செய்ய, இங்கு வழங்கப்பட்டுள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்யுங்கள். ஸ்கேன் செய்ததும், உங்களுக்கான இணைப்பு திறக்கும். அதில் உங்கள் கருத்துகளை டைப் செய்து அனுப்பலாம்.

0 / 150 words